தமிழ் பழமொழியும் அதன் விளக்கமும் பொருளும்

  •         தமிழ் பழமொழியும் அதன் பொருளும்


1.ஆயிரங்காலத்துப் பயிர்-நீண்ட காலத்திற்கு உரியது

2. எடுப்பார் கைப்பிள்ளை-தன் சிந்தனை இன்றி சொல்பவர் பேச்சைக் கேட்டு நடப்பது

3. ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது-பட்டறிவில்லாத படிப்பறிவு.

4. அவலை நினைத்து உரலை இடித்தல்-எண்ணமும் செயலும் ஒத்து வராமை.

5. முதலை கண்ணீர்-பொய்யை அழுகை.

6. அவசரக் குடுக்கை-எண்ணித் துணியாதார்.

7. ஆகாயத்தாமரை-இல்லாத ஒன்று

8. கம்பி நீட்டல்-சொல்லிக்கொள்ளாமல் செல்லல்.

9.தாளம் போடுதல்-எதைச் சொன்னாலும்               அப்படியே  ஏற்றுக் கொள்ளல்.

10.கானல் நீர்-இருப்பதுபோல் தோன்றும் ஆனால் இராதது.

11. பஞ்சாய்ப் பறத்தல்-அலைந்து திரிதல்

12. குட்டிச்சுவர்-பயனின்றி இருத்தல்.

13. கொட்டியளத்தல்-மிகுதியாகப் பேசுதல்

14. அகழ்வாரை தாங்கும் நிலம் போல-பொறுமை

15. நன்பால் கலந்தீமையால் திரிதல் போல-கெடுதல்

16. மரப்பாவை நாணால் உயிர்மருட்டல் போல மயங்குதல். 
       
17. அடுத்தது காட்டும் பளிங்கு போல-வெளிப்படுத்துதல்
What 18. அத்தி பூத்தாற்போல் -அரிய செயல்

19. அடியற்ற மரம் போல-வீழ்தல்

20. இலவு காத்த கிளி போல-ஏமாற்றம்

21. உடலும் உயிரும் போல-ஒற்றுமை ,நெருக்கம்

22. கடல் மடை திறந்தார் போல-வெளியேறுதல்

23. பகலவனை கண்ட பனி போல-நீங்குதல்

24. உள்ளங்கை நெல்லிக்கனி போல-தெளிவு

25. தாமரை இலை தண்ணீர் போல-பற்றின்மை

26. கடலில் கரைந்த காயம் போல-பயனற்றது

27. கொடுக்கத் தேனாய் கொட்டுவது ஏன்-வருத்தம்

28. இடியோசை கேட்ட நாகம் போல-நடுக்கம்

29. செந்தமிழும் சுவையும் போல-ஒற்றுமை

30. தாயைக் கண்ட சேயைப் போல-இன்பம் மற்றும் அதிக மகிழ்ச்சி.

31. நகமும் சதையும் போல-இணை பிரியாமை

32. மழைக் காண பயிர் போல-வாடுதல்

33. வேலியே பயிரை மேய்ந்தது போல-நயவஞ்சகம்

34. அன்றலர்ந்த மலர்போல-புத்துணர்வு

35. அனலில் விழுந்த புழுப்போல்-வேதனை

36. கண்கட்டு வித்தை போல-மாயத்திரை

37. பத்திரை மாற்று தங்கம் போல-பெருமை

38. நாயும் பூனையும் போல-பகை

39. அலை ஓய்ந்த கடல் போல-அமைதி

40. பசுமரத்தாணி போல-எளிதாகப் பதிதல்

41. குன்றின் மேல் இட்ட விளக்கு போல-பயனுடைமை மற்றும் பயன்

42. கனியிருப்பக் காய் கவர்ந்தற்று போல-அறியாமை,தேவையற்ற செயல்

43.இலைமறைகாய் போல-வெளிப்படுதல்

44. ஆலையில் அகப்பட்ட கரும்பு போல-துன்பம்

45. குரங்கு கையில் அகப்பட்ட பூமாலை போல-நாசம்

46. செவிடன் காதில் ஊதிய சங்கு போல-பயனின்மை

47. ஞாயிறு கண்ட தாமரை போல-மகிழ்ச்சி

48. நீர் மேல் எழுத்துப் போல-நிலையற்றது

49. பழம் நழுவி பாலில் விழுந்தது போல-இன்ப  மிகுதி

50. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல-வருத்தம்

51. அனலில் பட்ட மெழுகு போல-துன்பம் கண்டு உருகுதல்.

52. பொன்மலர் மணம் பெற்றது போல-பொருட் செல்வம் அறிவு செல்வதால் தேடிக்கொள்வது.

53. கண்ணில்லாதவன் கண் இழந்தது போல-தவிப்பு.

54. கரையான் புற்றெடுக்க கருநாகம் குடி புகுந்தது போல-அத்துமீறல்.

55. அச்சில் வார்த்தார் போல்-ஒரே சீராக

56. அழுத பிள்ளைக்கு வாழைப்பழம் போல-ஏமாற்றுதல்

57. ஆழம் தெரியாமல் காலை விட்டது போல               திட்டமிடாமை

58. இஞ்சி தின்ற குரங்கு போல-விழித்தல்

59. இரும்பை கண்ட காந்தம் போல-கவர்ச்சி

60. உடும்பு பிடி போல-பிடிப்பு

61. உமையும் சிவனும் போல-நட்பு நெருக்கம்

62. உச்சந்தலையில் ஆணி அறைந்தது போல-உறுதி

63. ஊமை கண்ட கனவு போல-தவிப்பு, கூற                      ‌‌இ‌‌‌‌யலாமை.

64. எள்ளில் எண்ணெய் போல-ஒளிந்து இருத்தல், மறைவு.

65. ஏழை பெற்ற செல்வம் போல-மகிழ்ச்சி

66. ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை ஓட்டினார் போல-விரட்டுதல்


67. வருமுன் காவாமை கயிறற்ற பட்டம்  போல-         தவித்தல் ,வேதனை.  

68. கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பது போல-பிறரை ஏமாற்றுதல்

69. கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல-துன்பம் மற்றும் வேதனை

70. காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் மேய்ந்தார் போல-வேகம்

71. சீறிய நாகம் போல-கோபம்

72. கடன் பட்டார் நெஞ்சம் போல-கலக்கம் வருத்தம்

73. செல்லரித்த ஓலைப் போல-பயனின்மை

74. பாம்பின் வாய் தேரை போல-மீளாமை

75. நீரும் பாம்பும் போல-விலகுதல்

76. முக்காலம் உணர்ந்த முனிவர் போல -அறிதல்

77. பாய் மரம் சாய்ந்தது போல --விழுதல்

78. மரம் ஏற்றின் வண்டி போல-சுமை

79. புற்றீசல் போல-பெருகுதல்

80. புளியம் பழமும் தோடும் போல-ஒற்றுமை

81. கோலை எடுத்தால் குரங்கு ஆடுவது போல--
 பயம்

82. பால்மணம் மாறாத குழந்தை போல -வெகுளி

83. மேகம் கண்ட மயில் போல-- மகிழ்ச்சி ஆனந்தம்

84. சாயம்போன சேவை போல--மதிப்பின்மை

85. சர்க்கரை பந்தலில் தேன் மாரி பொழிந்தது போல--அதிக இன்பம்

86. சித்திரை பதுமை போல --
அழகு

87. சிவபூஜையில் கரடி போல --விருப்பமின்மை

88. சேற்றில் பிறந்த செந்தாமரை போல --உயர்வு மற்றும் மேன்மை

89. சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை போல-- திரும்பச் செய்தல், அறிவின்மை
.
90. தோன்றி மறையும் வானவில் போல-- நிலையற்ற நிலையாமை

91. நத்தைக்குள் முத்து போல- உயர்வு, மேன்மை

92. நீருக்குள் பாசிபோல-- நயவஞ்சகம், ஏமாற்றம்

93. தாயைப் போல பிள்ளை-தொடர்பு

94. திருடனைத் தேள் கொட்டியது போல் --சொல்லமுடியாத வேதனை

95. சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தல் போல--வேண்டாத வேலை ,கேடு செய்தல்

96. காட்டுத்தீ போல --வேகமாக பரவுதல்

97. சித்திரப் பதுமை போல-- அழகு

98. குடத்திலிட்ட விளக்கு போல --இகழ்ச்சி

99. நாண் அறுந்த வில் போல-பயனற்றது

100. குளிக்கப் போய்ச் சேறு பூசிக் கொண்டு வருவது போல--குறும்புகளில் ஈடுபடுவது..

     

Comments

Post a Comment

Popular posts from this blog

தமிழ் நூலாசிரியர்களும், நூல்களும்/தமிழ் நூல்கள் மற்றும் அதன் ஆசிரியர்கள்..

தொகைச் சொற்களை விரித்து எழுதுதல்