பதினெண் மேற்கணக்கு நூல்கள்./தமிழின் பதினெண்மேல்கணக்கு நூல்கள்

                     பதினெண்மேற்கணக்கு நூல்கள்

                       


பதினெண் மேற்கணக்கு நூல்கள்:

               *எட்டுத்தொகை
               *பத்துப்பாட்டு


எட்டுத்தொகை:


           " நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
            ஒத்த பதிற்றுப்  பத்து ஓங்கு பரிபாடல்
            கற்றறிந்தோர் ஏத்தும் கலியோடு அகம் புறம்
            என்று இத்திறத்த எட்டுத் தொகை."


*அக நூல்கள் ஐந்து:
            நற்றிண, ஐங்குறுநூறு ,குறுந்தொகை ,கலித்தொகை ,அகநானூறு.


*புற நூல்கள் இரண்டு:
           பதிற்றுப்பத்து, புறநானூறு.

*எட்டுத்தொகையில் அகமும் புறமும் கலந்து நூல்:
            பரிபாடல்.



*நற்றிணை:


1. நன்மை+திணை=நல்+திணை=நற்றிணை.

2.நற்றினை ஓர் அக நூல் . அக  நூலாக இருப்பினும் புறப்பொருள் செய்திகளும் தமிழகத்தைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளும் நிறைய இடம் பெற்றுள்ளன.

3. 175 புலவர்கள் பாடிய 400 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

4. இதன் சிற்றலை 9 அடி. பேரெல்லை 12 அடி.

5.தொகுத்தவர் இன்னார் என தெரியவில்லை .தொகுப்பித்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி.

6. இதன் கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.

7. நற்றிணையின் கடவுள்  வாழ்த்து திருமாலை பற்றியது.

8. நற்றிணையின் உள்ள பாடல்கள் ஆசிரியப்பாவால் ஆனது.

9. நல் என்னும் அடைமொழியுடன் போற்றப்பட்டது.

10. ஐந்து வகை திணைகளுக்குமான பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

நற்றிணையில் இருந்து சில பாடல் வரிகள்:


    " புன்கண் அஞ்சும் பண்பின்
     மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே ‌."
                                           -மிளைகிழான் நல்வேட்டனார்.

       "நீரின்றி அமையா உலகம் போலத்
       தமிழின்று அமையா நம்நயந்து அருளி."
                                          -கபிலர்.

       "இளமையிற் சிறந்த வளமையும் இல்லை"
                                          -பெயர் தெரியவில்லை.

       "சாதல் அஞ்சேன், அஞ்சுவது சாவில்"
                                          -பெயர் தெரியவில்லை.

குறுந்தொகை:


1. குறுமை+தொகை=குறுந்தொகை
2. ஆசிரியப்பாக்களால்  அமைந்த அகப்பொருள் நூல்.
3. இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ.
4. தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.
5. இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடலை பாடியவர்-  பாரதம் பாடிய பெருந்தேவனார்.
6. 'நல்ல' என்னும் அடைமொழியுடன் சிறப்பிக்கப்படும் நூல் குறுந்தொகை.

குறுந்தொகையிலிருந்து சில பாடல் வரிகள்:


   "யாரும் இல்லை தானே கள்வன்
     தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ
     நினைத்தா ளன்ன சிறுபசுங் கால
     ஒழுகுநீ ராரல் பார்க்கும்
     குருகு முரண்டு தான் மணந்த ஞான்றே".
                                                     --கபிலர்
    "நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
     நீரினும் ஆரள வின்றே சாரல்
     கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
     பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே".
                                                       -தேவகுலத்தார்.

    "கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
      காமம் செப்பாது கண்டது மொழிமோ".
                                                        -இறையனார்.
    "வினையே ஆடவர்க்கு உயிரே வாள் நுதல்
      மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிரே
      செம்புலப் பெயல் நீர் போல".
                                                -பாலைபாடிய பெருங்கடுங்கோ
    "அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே
     இம்மை மாறி மறுமை ஆயினும்
     நீயா கியர் என் கணவனை".
                                              -செம்புல பெயல் நீரார்
    "யானா கியர் நின் நெஞ்சு நேர்பவளே".
                                               -அம்மூவனார்.
    "சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு இவள்
      உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே".
                                               -கபிலர்.

ஐங்குறுநூறு:


     ஐந்து+குறுமை+நூறு=ஐங்குறுநூறு.

1. மூன்றடிச் சிறுமையும், ஆறடி பெருமையும் கொண்ட அகவற்பாக்களால் தொகுக்கப்பட்ட அகப்பொருள் நூல்.

2.திணைக்கு நூறு பாடல்களாக ஐந்து திணைகளுக்கும்     ஐநூறு பாடல்கள் உள்ளன.

3. ஐந்து திணைப் பாடல்களையும் பாடிய புலவர்கள்:

    மருதமோ ரம்போகி  நெய்த லம்மூவன்
    கருதுங் குறிஞ்சி கபிலன் கருதிய
    பாலையோத லாந்தை பனிமுல்லை பேயனே
    நூலையோ தைங்குறு நூறு.

     மருதம்-ஓரம்போகியார்.

     நெய்தல்-அம்மூவன்

     குறிஞ்சி-கபிலன்

      பாலை- ஓதலாந்தையார் 

     முல்லைப் பேயனார்.

*ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலை பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.

*இந்நூலின் கடவுள் வாழ்த்துச் செய்யுள் சிவபெருமானை பற்றியது.

*இந்நூலைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்.

*தொகுப்பித்தவர் சேரமன்னன் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை.

*இந்நூல் ஆதன் அவினி போன்ற மலைநாட்டு வேந்தர் வரலாற்றை விளக்குவது.

*இந்திர விழா குறித்துக் கூறும் தொகை நூல்.

ஐங்குறுநூற்றில் இருந்து சில பாடல் வரிகள்:


  "மறுவில் தூவிச் சிறுகருங் காக்கை
    
   அன்புடை மரபின் கிளையோ டாரப்
   
   பச்சூன் பெய்த பைந்நிண வல்சி

   பொலம்புனை கலத்திற் றருகுவென் யாதோ

   வெஞ்சின விறல்வேற் காளையோ

   டஞ்சி லோதியை வரக்கரைந் தீமே ".
                                                                     -ஓதலாந்தையார்


 அன்னாய் வாழி வேண்டன்னை நம்படப்பைத்

 தேன் மயங்கு பாலினும் இனிய அவர் நாட்டு

 உவலைக் கூவல் கீழ

 மானுண்டு எஞ்சிய கலுழி நீரே".  
                                                                      -கபிலர்.


 "விளைக வயலே வருக இரவலர்

   என வேட்டோய் யாயே."
                                                         -ஓரம்போகியார்.


பதிற்றுப்பத்து:


பத்து+இன்+இன்று+பத்து=பதிற்றுப்பத்து

பத்து+பத்து=பதிற்றுப்பத்து.

*பத்து சேர அரசர்களைப் பற்றி பத்துப் புலவர்கள் பாடிய பத்து பாடல்களே பதிற்றுப்பத்து.

*முதல் பத்து மற்றும் இறுதி பத்து நூல்களும் கிடைக்கவில்லை.

*இந்நூலைப் பதித்தவர் உ.வே சாமிநாத ஐயர்.

*உரை எழுதியவர் சு. துரைசாமி பிள்ளை.

*அகவற்பாவாலான புறப்பொருள் நூல்.

*அக்கால அரசர்களைப் பற்றிய வரலாற்றுக்கும் ஆராய்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கிறது.

*ஒவ்வொரு பாட்டின் முடிவிலும் துறை , வண்ணம் தூக்கு(இசை), பெயர் என்பவற்றைப் புலப்படுத்தும் குறிப்புகள் காணப்படுகின்றன.

*ஒவ்வொரு பாட்டிலும் பொருளால் சிறப்புடைத் தொடரொன்று அவ்வப்பாட்டின் பெயராக அமைந்துள்ளது.

*பிற்காலத்தில் அந்தாதித் தொடையிற் பாடல்கள் இயற்ற வந்தவர்களுக்கு இது ஒரு வழிகாட்டியாகும்.

*ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் அப்பத்தினைக் கூறும் வரலாற்றைக் கொண்ட பதிகம் காணப்படுகிறது.

*அப் பதிகம் பாடினவர் தம்பெயர்,  பத்துச் செய்யுட்களின் பெயர், புலவர் பெற்ற பரிசின் அளவு,அவ்வரசர்  ஆணட கால அளவு ஆகியவற்றை புலப்படுத்துகிறது.


*இரண்டாம் பத்து பதிகத்தில் கடம்பூர் கண்ணனார் என்ற புலவர் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பற்றி பாடினார்.

*மூன்றாம் பத்து பதிகத்தில் பாலைக் கௌதமனார் என்ற புலவர் பல்யானைச் செல்கெழுகுட்டுவன் பற்றிப் பாடினார்.

*நான்காம் பத்து பதிகத்தில் காப்பியாற்றுக் காப்பியனார் என்ற புலவர் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் பற்றி பாடினார்.

*ஐந்தாம்பத்து பதிகத்தில் பாணர் என்ற புலவர் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் பற்றிப் பாடினார்.

*ஆறாம் பத்து பதிகத்தில் காக்கைபாடினியார் என்ற புலவர் ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் என்ற அரசனைப் பற்றி பாடினார்.

*ஏழாம்பத்து பதிகத்தில் கபிலர் என்ற புலவர் செல்வக் கடுங்கோ வாழியாதன் பற்றி பாடினார்.

*எட்டாம்பத்து பதிகத்தில் அரிசில் கிழார் என்ற புலவர் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை பற்றி பாடினார்.

*ஒன்பதாம்பத்து பதிகத்தில் பெருங்குன்றூர் கிழார் என்ற புலவர் இளஞ்சேரல் இரும்பொறை பற்றி பாடினார்.

* பதிற்றுப்பத்து  இசையோடு பாடப்பட்ட பாடல்.

பரிபாடல்:

*ஓங்கு பரிபாடல் என சிறப்புறக் கூறப்பெற்ற நூல்.

*பரிபாடலின் சிற்றெல்லை 25 அடி, பேரெல்லை 400 அடி.

*தமிழின் முதல் இசைப்பாடல் பரிபாடல்.

*எட்டுத்தொகை நூல்களுள் அறம், பொருள், இன்பம், என்ற நான்கையும் கூறும் நூல்.

*இந்நூலில் திருமால் செவ்வேல் ஆகிய தெய்வ வழிபாட்டு பாடல்களும் வைகை மதுரை ஆகிய இயற்கை காட்சி பாடல்களும் இடம்பெற்றுள்ளன.

*இன்பம் நுதலி வரும் நூல்.

*70 பாடல்களில் இன்று கிட்டுபவை 22 மட்டுமே அவற்றில் திருமாலுக்கு உரியவை 6 முருகனுக்கு உரியவை 8 வைகைக்கு கூறியவை 8.

*பாண்டியர்களையும் பாண்டிய நாட்டையும் சிறப்பிக்கவே பாடப்பட்ட நூல் பரிபாடல்.

*பரிபாடல் புராண கதைகளை மிகுதியாகக் கூறும் நூல்.


கலித்தொகை:

* "கற்றறிந்தோர் ஏத்தும் கலி, கல்விவலார் கண்ட கலி என்னும் தொடர்களால் சிறப்பிக்கப்படும் நூல்.

* கலித்தொகை கலிபாக்களால்  அமைந்தது.

*நாடகப் பாங்கில் அமைந்துள்ளது ,இசையோடு பாடுவதற்கு ஏற்றது,துள்ளல்  ஓசை கொண்டது.

*குறிஞ்சி , முல்லை,மருதம் ,நெய்தல், பாலை என ஐந்து பெரும் பிரிவுகளை உடையது.

*கடவுள் வாழ்த்து சிவனைப் பற்றியது.

*ஏறுதழுவுதல் பற்றி கூறும் நூல்.

*காமக்கிழத்தி பேசுவதாக அமைந்த ஒரே சங்க நூல்.

*பாரதக்கதைகளில் மிகுதியாக கூறும் நூல்.

*கலித்தொகை பாடலில் இருந்து சில வரிகள்:

    "ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்

      போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை

      பண்பெனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்
 
      அன்பெனப் படுவது தன்கிளை செறாஅமை

      அறிவெனப்படுவது பேதையார் சொல்நோன்றல்

      செறிவெனப்படுவது கூறியது மறாஅமை

      நிறைவெனப்படுவது மறை பிறர் அறியாமை

     முறையெனப்படுவது கண்ணோடாது உயிர்வௌவல்

     பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்."

                                                              -நல்லந்துவனார்.

அகநானூறு:

அகம்+நான்கு+நூறு=அகநானூறு.

*அகப்பொருள் அமைந்த  நானூறு பாடல்கள்.

*ஆசிரியப்பாவால் ஆனது.

*குடவோலை தேர்தல் குறித்து கூறும் நூல்.

*கடவுள் வாழ்த்து சிவபெருமானை பற்றியது.

*நெடுந்தொகை என சிறப்பித்துக் கூறும் நூல்.

*13 அடி சிற்றெல்லை 31 அடி பேரெல்லை.

*தொகுத்தவர் மதுரை உப்பூரி குடி கிழார் மகனார் உருத்திரசன்மர்.

*தொகுப்பித்தவர் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி.

*இந்நூல் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

களிற்றியானை நிறை-120 பாடல்கள்

மணிமிடை பவளம்-180  பாடல்கள்.

நித்திலக் கோவை-100 பாடல்கள்.

1,3,5,7,...-பாலைத் திணைப் பாடல்கள்.

2,8,12,18,...-குறிஞ்சித் திணைப் பாடல்கள்.

4,14,24,...-முல்லைத் திணைப் பாடல்கள்.

6,16,26,36...-மருதத்திணைப் பாடல்கள்.

10,20,30....-நெய்தல் திணைப் பாடல்கள்.

மேற்கோள் வரிகள்:

   "புல்லார் புரவி வல்விரைந்து பூட்டி
     நெடுந்தேர் ஊர்மதி வலவ".

புறநானூறு:

*புறம்+நான்கு+நூறு=புறநானூறு.

* புறப்பொருள் தொடர்பான நானூறு பாடல்களைக் கொண்ட நூல்.

*புறப்பாட்டு எனவும் புறம் எனவும் இந்நூல் சிறப்பிக்கப்படுகிறது.

*இந்நூலின் கடவுள் வாழ்த்து சிவனைப் பற்றியது.

*இந்நூல் அகவற்பாவால் ஆனது.

*இந்நூல் தமிழருடைய சிறந்த கருவூலம் என்று கூறத்தக்க பெருமையுடையது.

*பண்டைய கால பேரரசர் ,சிற்றரசர் ,படைத்தலைவர் வீரர்கள், வள்ளல்கள் ,ஆகியோர்களின் வரலாறுகளை ஓரளவு அறிய இந்நூல் உதவுகிறது.

*இந்நூலின் சில பாடல்களை ஜி .யு போப் என்னும் மேல்நாட்டு அறிஞர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

*புறநானூற்றின் சில பாடல்களை பாடியவர் பரணர்.இவர் கபிலர் போல் மிக்க புகழுடன் வாழ்ந்தார் என்பதை கபிலபரணர் என்னும் பெயரால் அறியலாம்.

*இவர் பதிற்றுப்பத்தில்  ஐந்தாம் பத்து பாடி கடல் பிறர்கோட்டிய செங்குட்டுவனிடம் உம்பற்காட்டு வாரியையும் அவன் மகன் குட்டுவன் சேரலையும் பரிசிலாகப் பெற்றவர்.

*நலங்கில்லிக்கும், நெடுங்கிள்ளிக்கும் இடையே தூது சென்றவர் கோவூர்.

மேற்கோள் வரிகள்:

 "செல்வத்துப் பயனே ஈதல்".

"பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய
  மாமலி பயந்த காமரு மணியும்."

"நல்லது செய்தலாற்றி ராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின் அதுதான்."

"எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே".

"உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே."

"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே."

"யாதும் ஊரே யாவரும் கேளிர்."

"தீதும் நன்றும் பிறர் தர வாரா."

பத்துப்பாட்டு:

"முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை

பெருகு வளமதுரைக் காஞ்சி மருவினிய

கோல நெடுநல்வாடை கோல் குறிஞ்சி பட்டினப்

பாலை கடாத்தொடும் பத்து."

1. திருமுருகாற்றுப்படை 2. பொருராற்றுப்படை, 3.சிறுபாணாற்றுப்படை 4. பெரும்பாணாற்றுப்படை
5. முல்லைப்பாட்டு 6. மதுரை காஞ்சி
7. நெடுநல்வாடை 8. குறிஞ்சிப்பாட்டு
9. பட்டினப்பாலை 10. மலைபடு கடாம்.

* பத்துப்பாட்டு நூல்களுள் அகப்பொருள் பற்றியன

  முல்லைப்பாட்டு ,குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை.

*புற நூல்கள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, மலைபடுகடாம்.

*அகம்புறம் புறம் இரண்டையும் தழுவி வந்த நூல் நெடுநல்வாடை.

வேறு பெயர்கள்:

*திருமுருகாற்றுப்படை-புலவராற்றுப்படை

*பெரும்பாணாற்றுப்படை-பாணாறு.

*முல்லைப்பாட்டு-நெஞ்சாற்றுப்படை.

*குறிஞ்சிப்பாட்டு-பெருங்குறிஞ்சி.

*பட்டினப்பாலை-வஞ்சி நெடும்பாட்டு.

*மலைபடுகடாம்-கூத்தராற்றுப்படை.

1.திருமுருகாற்றுப்படை:

*இதன் ஆசிரியர் நக்கீரர்.

*பாடப்பட்டவர் முருகன்.

*317 அடிகள் ஆசிரியப்பாவால் ஆனது.

*ஆற்றுப்படை நூல்கள் பரிசில் பெறச் செல்வோரால் பெயர் பெறும்.

*திருமுருகாற்றுப்படை மட்டும் பரிசில் கொடுப்போனால் பெயர் பெற்றது.

2.பொருநாறாற்றுப்படை

*இதன் ஆசிரியர் முடத்தாமக்கண்ணியார்.

*பாட்டுடைத் தலைவன் கரிகால் பெருவளத்தான்.

*ஆசிரியப்பாவால் ஆனது.

*கரிகால் சோழனின் பெருமையும் கொடை வழங்கும் சிறப்பினையும் வீரத்தையும் காவிரியின் சிறப்பினையும் இந்நூல் விவரிக்கிறது.

3. சிறுபாணாற்றுப்படை:

*பாடியவர் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்.

*பாடப்பட்டவர் ஓய்மா நாட்டு நல்லியக்கோடன்.

*269 அடிகள் கொண்ட ஆசிரியப்பாவால் ஆனது.

*கடையேழு வள்ளல்களைப் பற்றி கூறும் நூல்

*பேகன்-மயிலுக்கு போர்வை தந்தவன்.

  பாரி-முல்லைக்குத் தேர் தந்தவன்.

 காரி-ஈர நன்மொழி இரவலர்க்கு ஈந்து காத்தவன்.

 ஆய்-நாகம் கொடுத்த ஆடையை சிவனுக்கு கொடுத்தவன்.

  அதியமான்-நெல்லிக்காயை அவ்வைக்கு தந்தவன்.

  நள்ளி-நடைப்பரிகாரம் முட்டாது கொடுத்தவன்.

  ஓரி-குறும்பொறை நாட்டையே கூத்தார்க்கு கொடுத்தவன் காரி என்பவனுடன் போர் செய்தவன் ஓரி.


4. பெரும்பாணாற்றுப்படை:

*பாடியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார்.

*பாட்டுடைத் தலைவன் தொண்டைமான் இளந்திரையன்.

*500 அடிகள் கொண்ட ஆசிரியப்பாவால் ஆனது.

5. முல்லைப்பாட்டு:

*பத்துப்பாட்டு நூல்களில் மிகச் சிறிய அடிஅளவை கொண்ட பாடல்.

*103 அடிகளை உடையது.

*ஆசிரியர் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார்.

*பாசறை அமைப்பை பற்றி கூறும் நூல் -முல்லைப்பாட்டு.

6.மதுரைக்காஞ்சி:

*பாடியவர் மாங்குடி மருதனார்.

*பாட்டுடைத் தலைவன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்.

*பத்துப்பாட்டு நூல்களுள் மிகப்பெரிய பாடல்.

*மதுரைக்காஞ்சி 782 அடிகளை உடைய நூல்.

*இந்நூல் "பெருகு வளமதுரைக் காஞ்சி" எனப் புகழப்படுகிறது.

*இதற்கு  கூடற்றமிழ் என்னும் சிறப்பு பெயரும் உண்டு.

7. நெடுநெல்வாடை:

*பாடியவர் நக்கீரர்.

*பாட்டுடைத் தலைவன் பாண்டியன் நெடுஞ்செழியன்.

*188 அடிகள் கொண்டது.

*அரண்மனை அமைப்பைப் பற்றி கூறும் நூல் நெடுநல்வாடை.

8. குறிஞ்சிப்பாட்டு:

*பாடியவர் கபிலர்.

*ஆரிய அரசன் பிரகத்தனுக்கு தமிழ் சுவையினையும் அகப்பொருள் மரபினையும் உணர்த்த வேண்டி பாடப்பட்ட நூல்.

*99 பூக்கள் குறித்துக் கூறும் நூல் குறிஞ்சிப்பாட்டு.

9.பட்டினப்பாலை

*கடியலூர் உருத்திரங்கண்ணனார் சோழன் கரிகாலன் பெருவளத்தானைப் பாடியது.

*301 அடிகள் கொண்ட வஞ்சியடிகள் கலந்த ஆசிரியப்பா.

10. மலைபடுகடாம்:

*இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடியது.

*பாட்டுடைத் தலைவன் செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னன்.

*583 அடிகள் ஆசிரியப்பாவால் ஆனது.






Comments

Post a Comment

Popular posts from this blog

தமிழ் நூலாசிரியர்களும், நூல்களும்/தமிழ் நூல்கள் மற்றும் அதன் ஆசிரியர்கள்..

தொகைச் சொற்களை விரித்து எழுதுதல்

தமிழ் பழமொழியும் அதன் விளக்கமும் பொருளும்