பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்/தமிழின் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணை முப்பால்
கடுங் கோவை பழமொழி மாமூலம்
இன்னிலைய காஞ்சியோடு ஏலாதி என்பவே
கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு.
நாலடியார்:
*நாலடியார் -நான்கு +அடி +ஆர். நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆன நூல்.
*நாலடியாரில் 400 பாடல்கள் உள்ளன.
*நாலடியாரை நாலடி நானூறு எனவும் வழங்குவர்.
*நாலடியாரில் மூன்று பெரும் பிரிவுகள் உள்ளன அவை அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால் ஆகும்.
*நாலடியாரை சிறப்பிக்கும் வகையில் பழமொழி "ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி" "நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி."
*சமண முனிவர் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பு.
*சிறப்பு பெயர்கள்:-வேளாண் வேதம் ,நாலடி நானூறு.
*தொகுத்தவர் பதுமனார்.
*முப்பாலாக பகுத்தவர் தருமர்.
*அதிகாரம் வகுத்தவர் பதுமனார்.
அறத்துப்பால்-13 அதிகாரம்
பொருட்பால்-24 அதிகாரம்
காமத்துப்பால்-3 அதிகாரம்.
*40 அதிகாரங்களும், 12 இயல்களும் உள்ளன.
*பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள ஒரே தொகை நூல் நாலடியார்.
*இந்நூலை ஜி .யு. போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
*சிறப்பு பெயர்கள்:-வேளாண் வேதம் ,நாலடி நானூறு.
*தொகுத்தவர் பதுமனார்.
*முப்பாலாக பகுத்தவர் தருமர்.
*அதிகாரம் வகுத்தவர் பதுமனார்.
அறத்துப்பால்-13 அதிகாரம்
பொருட்பால்-24 அதிகாரம்
காமத்துப்பால்-3 அதிகாரம்.
*40 அதிகாரங்களும், 12 இயல்களும் உள்ளன.
*பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள ஒரே தொகை நூல் நாலடியார்.
*இந்நூலை ஜி .யு. போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
நாலடியாரின் பெருமையை கூறும் வரிகள்:
*ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி
நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி"
*"சொல்லாய்ந்த நாலடி நானூறும் நன்கு இனிது"
*"பழகுதமிழ் சொல்லருமை நாலிரண்டில்"
மேற்கோள் வரிகள்:
"நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கணிய ராயினும்"
"கல்வி கரையில்; கற்பவர் நாள் சில"
நான்மணிக்கடிகை:
*நான்கு மணிகள் கொண்ட அடிகள், ஆதலால் நான்மணிகடிகை.
*ஆசிரியர்- விளம்பி நாகனார்.
*ஒவ்வொரு பாடலிலும் நான்கு மணியான கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன.
*104 பாடல்கள்.
மேற்கோள் வரிகள்:
*"மனைக்கு விளக்கம் மடவாள், மடவாள்
தனக்குத் தகைசால் புதல்வர்".
*"நிலத்துக்கு அணி நெல்லும் கரும்பும்
குளத்துக்கு அணி தாமரை
பெண்ணுக்கு அணி நாணம்.
*"யாரறிவார் நல்லான் பிறக்கும் குடி".
*"இந்நிலத்து மண்ணுதல் வேண்டின் இசை நடுக.
*"தன்னோடு செல்வது வேண்டின் அறம் செய்க".
இன்னா நாற்பது:
*ஆசிரியர்- கபிலர்.
*வாழ்க்கைக்கு துன்பம் தருபவை இவை இவை என கூறுகின்ற இந்நூல் 41 அடிகளை உடையது.
*இன்னிசை வெண்பாக்களால் ஆனது
இனியவை நாற்பது:
*ஆசிரியர் பூதஞ்சேந்தனார்.
*40 வெண்பாக்களை உடையது.
*கடவுள் வாழ்த்து சிவன், திருமால், பிரமம்ன் என்ற மூவரையும் வணங்குகிறது.
கார் நாற்பது:
*ஆசிரியர் மதுரை கண்ணன் கூத்தனார்.
*கார்கால நிகழ்ச்சியினை அழகுற கூறுகிறது.
*இந்நூலில் உவமையாகக் காட்டப்பட்டுள்ள மலர் தோன்றி மலர்.
களவழி நாற்பது:
*ஆசிரியர் பொய்கையார்.
*போர்க்கள கொடுமையை உள்ளவாரே வர்ணிக்கிறார்.
*சோழன் செங்கணான் சேரன் கணைக்கால் இரும்பொறை இருவருக்கும் போர் நடந்த இடம் கழுமலம்.
*கார்த்திகை திருவிழா குறித்து இந்நூல் கூறுகிறது.
ஐந்திணை ஐம்பது:
*ஆசிரியர் மாறன் பொறையனார்.
*திணைக்கு பத்து பாடல் வீதம் ஐம்பது பாடல்கள் உள்ளன.
ஐந்திணை எழுபது:
*ஆசிரியர் மூவாதியார்.
*ஐந்து திணைகளை பற்றிய 70 பாடல்களைக் கொண்டது.
திணைமொழி ஐம்பது:
*ஆசிரியர் கண்ணன் சேந்தனார்.
*திணைக்கு பத்து பாடலாக ஐம்பது பாடல்கள் உள்ளன.
திணைமாலை நூற்றைம்பது:
*ஆசிரியர் கணிமேதாவியார்.
*திணைக்கு 30 பாடல்கள் வீதம் 150 பாடல்கள் உள்ளன.
திருக்குறள்:
*திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர்.
*இவரது காலம் கிமு 31 ஆம் நூற்றாண்டு.
*திருக்குறள் ஏழு சீர்களைக் கொண்ட ஈரடி வெண்பாக்களால் ஆனது.
*133 அதிகாரங்களையும் 1330 குறள்களையும் கொண்டது.
*அறத்துப்பால் பொருட்பால் இன்பத்துப்பால் எனும் முப்பாலினால் ஆனது.
*அறத்துப்பால்-38 அதிகாரங்கள்.
*பொருட்பால்-70 அதிகாரங்கள்.
*இன்பத்துப்பால்-25 அதிகாரங்கள்.
*இதன் உட்பிரிவு ஒன்பது இயல்களைக் கொண்டது.
*அறத்துப்பால்-பாயிரவியல்,இல்லறவியல்,துறவறவியல, ஊழியல்.
*பொருட்பால்-அரசியல், அங்கவியல், ஒழிபியல்.
*காமத்துப்பால்-களவியல், கற்பியல்.
*இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
*திருக்குறளின் பெருமையைப் போற்றிப் பாடும் நூல் திருவள்ளுவமாலை. இயற்றியவர் இறையனார்.
*"தமிழ் மாதின் இனிய உயிர் நிலை" என்று பாராட்டப் பெறும் நூல் திருக்குறள்.
*"அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்" என்று அவ்வையார் புகழ்ந்துள்ளார்.
*"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" என்று பாரதியார் புகழ்ந்துள்ளார்.
*"வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே", "இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே" என்று பாரதிதாசன் புகழ்ந்துள்ளார்.
*திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளவர்களில் பரிமேலழகர் உரையை சிறந்தது என்பர்.
*திருக்குறள் என்பது அடையடுத்த கருவியாகு பெயர்.
*காமத்துப்பால்-களவியல், கற்பியல்.
*இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
*திருக்குறளின் பெருமையைப் போற்றிப் பாடும் நூல் திருவள்ளுவமாலை. இயற்றியவர் இறையனார்.
*"தமிழ் மாதின் இனிய உயிர் நிலை" என்று பாராட்டப் பெறும் நூல் திருக்குறள்.
*"அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்" என்று அவ்வையார் புகழ்ந்துள்ளார்.
*"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" என்று பாரதியார் புகழ்ந்துள்ளார்.
*"வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே", "இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே" என்று பாரதிதாசன் புகழ்ந்துள்ளார்.
*திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளவர்களில் பரிமேலழகர் உரையை சிறந்தது என்பர்.
*திருக்குறள் என்பது அடையடுத்த கருவியாகு பெயர்.
திருக்குறளின் மொழிபெயர்ப்பு:
*இலத்தின்-வீரமாமுனிவர்
*ஜெர்மன் -கிரால்.
*பிரெஞ்சு-ஏரியல்
*ஆங்கிலம்- ஜி .யு .போப்
*வடமொழி- அப்பர் தீட்சிதர்.
*இந்தி- பி.டி .ஜெயின்
*தெலுங்கு- வைத்தியநாத பிள்ளை.
திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த இந்தியர் -கே. எம் .பாலசுப்ரமணியம்.
திரிகடுகம்:
*ஆசிரியர் -நல்லாதனார்.
*100 வெண்பாக்களை உடையது.
*சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய முப்பொருள்களின் மருந்து உடல் நோயை போக்குவது போல இந்நூலில் உள்ள மூன்று கருத்துக்கள் உள்ளத்து நோயைப் போக்கும்.
ஆசாரக்கோவை:
*ஆசிரியர் -பெருவாயில் முள்ளியார்.
*அன்றாட வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு, ஒழுக்கம் ஆகியவற்றை இந்நூல் எடுத்துரைக்கிறது.
பழமொழி நானூறு:
*ஆசிரியர் -முன்றுறை அரையனார்.
*400 பாடல்களைக் கொண்ட நூல்.
*ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழி இடம்பெற்றுள்ளது.
*பழமொழியை முதுமொழி, மூதுரை, உலக வசனம் எனவும் வழங்குவர்.
சிறுபஞ்சமூலம்:
*ஆசிரியர் -காரியாசான்.
*கடவுள் வாழ்த்துடன் 97 வெண்பாக்கள் உள்ளன.
*கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி நெருஞ்சி ஆகிய 5 மூலிகையின் வேர்களும் உடல் நோயைத் தீர்ப்பது போல இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் கூறப்பட்டுள்ள ஐந்து கருத்துக்களும் மக்களின் மன நோயைப் போக்கும்.
*இவரும் கணிதமேதாவியாரும் சமகாலத்தவர்.
முதுமொழிக்காஞ்சி:
*ஆசிரியர்- மதுரை கூடலூர் கிழார்.
*"அறவுரைக்கோவை"எனவும் இந்நூல் வழங்கப்படுகிறது.
*இந்நூலின் 10 அதிகாரங்களில் பத்து பாடல்கள் வீதம் நூறு பாடல்கள் உள்ளன.
ஏலாதி:
*ஆசிரியர் -கணித மேதாவியார்.
*ஏலம், இலவங்கம், சிறுநாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றினால் ஆன மருந்து பொருளுக்கு ஏலாதி என்பது பெயர்.
*இந்நூல் சிறப்புப் பாயிரம், தற்சிறப்புப் பாயிரம், உட்பட 81 வெண்பாக்களைக் கொண்டது.
கைந்நிலை:
*ஆசிரியர்- புல்லங்காடனார்.
*திணைக்கு 12 பாடல்கள் வீதம் 60 பாடல்களை கொண்ட நூல் என்ற வேறு பெயரும் உண்டு.
இன்னிலை:
*ஆசிரியர்-பொய்கையார்.
*45 பாடல்கள் உள்ளன.
*அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால் வீட்டுப் பால் என நான்கு பாடல்களைக் கொண்டது.
Tq very useful for online class
ReplyDelete