Posts

Showing posts from 2019

கம்பராமாயணம் பற்றி சில குறிப்புகள்

                    கம்பராமாயணம் பற்றி சில குறிப்புகள் *கம்பராமாயணத்தை எழுதியவர் கம்பர். *காலம் பன்னிரெண்டாம் நூற்றாண்டு. * பிறந்த ஊர் நாகை மாவட்டம் -மயிலாடுதுறை அருகிலுள்ள தேரழுந்தூர். * இவர் இரண்டாம் குலோத்துங்க சோழனின் அவைப் புலவர். * இவரை ஆதரித்தவர் திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல். * செயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், புகழேந்தி, ஆகியோர் காலத்தவர். *" கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்", "விருத்தமென்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்","கல்வியில் பெரியவர் கம்பர்" எனும் தொடர்களால் கம்பரின் பெருமைகளை அறியலாம். *"யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் என்று பாரதியார் கம்பரை புகழ்ந்து பாடியுள்ளார். *திருக்குறளையும் கம்பராமாயணத்தையும் தமிழுக்கு கதி என்று என்பர் பெரியோர். * கம்பர் எழுதிய பிற நூல்கள்:1. ஏர் எழுபது,2. திருக்கை வழக்கம், 3. சடகோபர் அந்தாதி, 4. சரசுவதி அந்தாதி. *கம்பர் இந்நூலுக்கு இட்ட பெயர் இராமாவதாரம். *இராமகாதை "ஆதிகாவியம்" அதை என்றும் வடமொழியில் இயற்றிய வால்மீகி ஆதிகவி என்றும் பெயருண்டு. *வடமொழியில் ...

அறிஞர் அண்ணா, பெரியார், மற்றும் சுவாமி விவேகானந்தர் அவர்களின் அழகானபொன்மொழிகள்

Image
அறிஞர் அண்ணா, பெரியார், மற்றும் சுவாமி விவேகானந்தர் அவர்களின் பொன் மொழிகள். அறிஞர் அண்ணா அவர்களின் பொன்மொழிகள்: "எதிரிகள் தாக்கித் தாக்கித், தங்கள் வலுவை இழக்கட்டும். நீங்கள் தாங்கி தாங்கி வலுவைப் பெற்றுக்கொள்ளுங்கள்." "மோரை கடைந்து வெண்ணெய் எடுப்பது போல அறிவை வளர்த்து நல்லதை பெற்றுக்கொள்ளுங்கள்". "போட்டியும் பொறாமையும் பொய் சிரிப்பும் கலந்த இவ்வுலகில் நமது பாதையில் நாம் நேராக நடந்து செல்ல பக்கத் துணையாக இருப்பது நம் கல்வி மட்டுமே". "மறப்போம் மன்னிப்போம்". "கடமை, கண்ணியம், கட்டுப்பாடு." "எதையும் தாங்கும் இதயம் வேண்டும்". "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு". "பிறருக்குத் தேவைப்படும் போது நல்லவர்களாக தெரியும் நாம் தான் அவர்களது தேவைகள் தீர்ந்தவுடன் கெட்டவர்களாக விடுகின்றோம்". "நெஞ்சிலேயே வலுவிருப்பின் வெற்றி தஞ்சமென்று உரைத்து வந்து நம்மிடம் கொஞ்சிடுவது உறுதி". "ஒரு ஜனநாயக  சமுதாயத்தில் கருத்துக்களைச் சொல்வதற்குத் தடையோ சுதந்திர உணர்வுகளு...

தமிழின் வினா-விடை வகைகள்/வினா-விடை வகைகள்.

                              வினா -விடை வகைகள் வினா ஆறு வகைப்படும்: 1. அறிவினா 2. அறியா வினா 3. ஐய வினா 4. கொளல் வினா 5. கொடை வினா 6. ஏவல் வினா என்பன. அறிவினா:                        அறிவினா என்பது, தான் ஒரு பொருளைப் பற்றி நன்கு அறிந்திருந்தும், அப்பொருள் பற்றி பிறருக்கு தெரியுமா என்பதை அறியும் பொருட்டு வினாவப்படும் வினா அறிவினா ஆகும். எ.கா: திருக்குறளை இயற்றியவர் யார்? என ஆசிரியர் மாணவரிடம் வினவுவது. அறியா வினா:                     அறியா வினா என்பது தான் அறியாத ஒரு பொருளைப்பற்றி அறிந்து கொள்வதற்காக பிறரிடம் வினவுவது. எ.கா: எட்டுத்தொகை நூல்களுள் புறம் பற்றியன எவை? என மாணவன் ஆசிரியரிடம் வினவுவது. ஐய வினா:                  தனக்கு ஐயமாக (அச்சமாக) இருக்கின்ற ஒரு பொருள் குறித்து ஐயத்தைப்(அச்சத்தைப்) போக்கிக் கொள்வதற்காக வின...

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்/தமிழின் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்

        பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்  நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணை முப்பால் கடுங் கோவை பழமொழி மாமூலம் இன்னிலைய காஞ்சியோடு ஏலாதி என்பவே கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு.   நாலடியார்: *நாலடியார் -நான்கு +அடி +ஆர். நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆன நூல். *நாலடியாரில் 400 பாடல்கள் உள்ளன. *நாலடியாரை நாலடி நானூறு எனவும் வழங்குவர். *நாலடியாரில் மூன்று பெரும் பிரிவுகள் உள்ளன அவை அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால் ஆகும். *நாலடியாரை சிறப்பிக்கும் வகையில் பழமொழி "ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி" "நாலும் இரண்டும்  சொல்லுக்கு உறுதி." *சமண முனிவர் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பு. *சிறப்பு பெயர்கள்:-வேளாண் வேதம் ,நாலடி‌ நானூறு. *தொகுத்தவர் பதுமனார். *முப்பாலாக பகுத்தவர் தருமர். *அதிகாரம் வகுத்தவர் பதுமனார்.   அறத்துப்பால்-13 அதிகாரம்   பொருட்பால்-24 அதிகாரம்   காமத்துப்பால்-3 அதிகாரம். *40 அதிகாரங்களும், 12 இயல்களும் உள்ளன. *பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள ஒரே தொகை நூல் நாலடியார். *இந்...

முச்சங்கம் (மூன்று சங்கம்) தமிழ் மொழியின் மூன்று சங்கங்கள்

                                  முச்சங்கம் (மூன்று சங்கம்) முச்சங்கம்:                     *  சங்கம் என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் மணிமேகலையின் ஆசிரியரான சீத்தலைச்சாத்தனார் ஆவார்.                     * சங்கம் பற்றிய குறிப்பு முதன்முதலில் திருநாவுக்கரசரின் தேவாரத்தில் வருகிறது.                     * முச்சங்கம் பற்றிய விரிவான செய்தியை முதலில் சொன்னவர் இறையனார் . களவியல் என்ற நூலின் உரையாசிரியர் நக்கீரர்.                    * மூவேந்தர்களும் தமிழ் வளர்த்தனர் என்றாலும் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை பாண்டியர்களுக்கு உரியது. முதற்சங்கம் :                         *முதற்சங்கம் தோன்றிய இடம் தென் மதுரை .   ...

பதினெண் மேற்கணக்கு நூல்கள்./தமிழின் பதினெண்மேல்கணக்கு நூல்கள்

                     பதினெண்மேற்கணக்கு நூல்கள்                         பதினெண் மேற்கணக்கு நூல்கள்:                *எட்டுத்தொகை                *பத்துப்பாட்டு எட்டுத்தொகை:            " நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு             ஒத்த பதிற்றுப்  பத்து ஓங்கு பரிபாடல்             கற்றறிந்தோர் ஏத்தும் கலியோடு அகம் புறம்             என்று இத்திறத்த எட்டுத் தொகை." *அக நூல்கள் ஐந்து:             நற்றிண, ஐங்குறுநூறு ,குறுந்தொகை ,கலித்தொகை ,அகநானூறு. *புற நூல்கள் இரண்டு:            பதிற்றுப்பத்து, புறநானூறு. *எட்டுத்தொகையில் அகமும் புறமும் கலந்து நூல்:             பரிபாட...

தமிழ் நூலாசிரியர்களும், நூல்களும்/தமிழ் நூல்கள் மற்றும் அதன் ஆசிரியர்கள்..

                 தமிழ் நூலாசிரியர்களும், நூல்களும் பத்துப்பாட்டு : 1. நக்கீரர்-திருமுருகாற்றுப்படை ,நெடுநல்வாடை 2. முடத்தாமக்கண்ணியார்-பொருநாராற்றுப்படை 3. உருத்திரங்கண்ணனார்-பெரும்பாணாற்றுப் படை பட்டினப்பாலை. 4. நல்லூர் நத்தத்தனார்-சிறுபாணாற்றுப்படை 5. பெருங்கௌசிகனார்--மலைபடுகடாம் அல்லது கூத்தராற்றுப்படை 6. கபிலர்- குறிஞ்சிப் பாட்டு 7. நப்பூதனார் -முல்லைப்பாட்டு 8. மாங்குடி மருதனார்-- மதுரைக் காஞ்சி. ஐம்பெருங்காப்பியங்கள் : 1. இளங்கோவடிகள்-- சிலப்பதிகாரம். 2. சீத்தலைச்சாத்தனார்- மணிமேகலை. 3. திருத்தக்கத்தேவர் -சீவகசிந்தாமணி. 4. நாதகுத்தத்தனார்-குண்டலகேசி. 5. பெயர் தெரியவில்லை- வளையாபதி. ஐஞ்சிறுங்காப்பியங்கள்: 1. தோலாமொழித் தேவர்-சூளாமணி 2. பெயர் தெரியவில்லை -உதயணகுமார காவியம். 3. பெயர் தெரியவில்லை-யசோதரக் காவியம். 4. பெயர் தெரியவில்லை -நாககுமார காவியம். 5. வாமன முனிவர் ( உரை எழுதியவர்)-- நீலகேசி. நாயன்மார்கள்(63 பேர்களுள்): 1. சேக்கிழார் -பெரிய புராணம். 2. சம்பந்தர் -திருக்கடைக்காப்ப...

தொகைச் சொற்களை விரித்து எழுதுதல்

             தொகைச் சொற்களை விரித்தெழுதுதல் 1.அறுசுவை--இனிப்பு கசப்பு புளிப்பு உவர்ப்பு கார்ப்பு துவர்ப்பு. 2.இருமை--இம்மை ,மறுமை 3. இருசுடர்--ஞாயிறு ,திங்கள் 4. இரு திணை--உயர்திணை ,அஃறிணை 5. ஈரெச்சம்--பெயரெச்சம் ,வினையெச்சம் 6. மூவிடம்--தன்மை, முன்னிலை ,படர்க்கை 7. முக்காலம்--இறந்த காலம் ,நிகழ் காலம், எதிர்காலம் 8. முந்நீர்--ஆற்று நீர், ஊற்று நீர் ,மழை நீர் 9. முப்பால்--அறத்துப்பால், பொருட்பால் ,காமத்துப்பால் 10. முத்தமிழ்--இயற்றமிழ், இசைத்தமிழ் ,நாடகத்தமிழ், 11. முப்பகை--காமம் ,வெகுளி ,மயக்கம். 12. முக்குடை--சந்திராதித்தம், சகலாபாசனம், நித்தவிநோதம். 13. முக்கனி--மா பலா வாழை. 14. மூவேந்தர்--சேரன், சோழன் ,பாண்டியன். 15. மூன்று ஒளி மண்டலங்கள்-- ஆலோகம், பிரபாமூர்த்தி, கனப்பிரபை. 16. திரிபலை--நெல்லிக்காய் ,தான்றிக்காய் ,கடுக்காய். 17. நான்மறை--ரிக், யஜுர், சாமம் ,அதர்வணம். 18. நாற்குணம்--அச்சம், மடம் ,நாணம் ,பயிர்ப்பு. 19. நாற்படை--தேர் ,யானை ,காலாள், குதிரை. 20. நாற்றிசை-- கிழக்கு ,மேற்கு ,வடக்கு ,தெற...

தமிழக விளையாட்டுகள்

                               தமிழக விளையாட்டுகள்           நாட்டுப்புறங்களில் 126 வகை விளையாட்டுகள் விளையாட பட்டதாக நம் வரலாற்று குறிப்புகள் குறிப்பிடுகின்றன. அவற்றுள் சிலவற்றன, 1. தமிழரின் தற்காப்புக் கலைகளில் ஒன்று சிலம்பாட்டம். 2.சிறுவர் விளையாடும் விளையாட்டுகள் பம்பரம்,கிளித்தட்டு ,உப்பு விளையாட்டு, கள்ளன் காவலன், கோலி கிட்டிப்புள் ,காற்றாடி ,பந்து விளையாட்டு, ஒற்றையா இரட்டையா, நீச்சல், எலியும் பூனையும், கரகர வண்டி, புளியங்கொட்டை,கள்ளன் போலிஸ்,கபடி, ராஜா மந்திரி, கல்லுக் கொடுத்தான் கல்லே வா, கில்லா பரண்டி. 3.சிறுமியர் விளையாடும் விளையாட்டுக்கள்:: பூப்பறித்தல் ,கரகர வண்டி, தட்டாங்கல், பல்லாங்குழி ஊஞ்சல் ,தாயம்,சில்லுக்கோடு,தட்டா மாலை,கும்மி,நொண்டி,கிச்சு கிச்சுத் தாம்பாளம், கொழுக்கட்டை, உருண்டை திரண்டை, சீப்பு விக்கிது, அக்கக்கா கிளி செத்துப் போச்சு,மெல்ல வந்து சொல்லிப் போ, பருப்புக் கடைந்து, அத்தளி புத்தளி. 4. ஆடவர் விளையாடுபவை:: போரிடல், ஏறுதழுவுதல் வேட்டையாடுத...

தமிழ் பழமொழியும் அதன் விளக்கமும் பொருளும்

        தமிழ் பழமொழியும் அதன் பொருளும் 1.ஆயிரங்காலத்துப் பயிர்-நீண்ட காலத்திற்கு உரியது 2. எடுப்பார் கைப்பிள்ளை-தன் சிந்தனை இன்றி சொல்பவர் பேச்சைக் கேட்டு நடப்பது 3. ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது-பட்டறிவில்லாத படிப்பறிவு. 4. அவலை நினைத்து உரலை இடித்தல்-எண்ணமும் செயலும் ஒத்து வராமை. 5. முதலை கண்ணீர்-பொய்யை அழுகை. 6. அவசரக் குடுக்கை-எண்ணித் துணியாதார். 7. ஆகாயத்தாமரை-இல்லாத ஒன்று 8. கம்பி நீட்டல்-சொல்லிக்கொள்ளாமல் செல்லல். 9.தாளம் போடுதல்-எதைச் சொன்னாலும்               அப்படியே  ஏற்றுக் கொள்ளல். 10.கானல் நீர்-இருப்பதுபோல் தோன்றும் ஆனால் இராதது. 11. பஞ்சாய்ப் பறத்தல்-அலைந்து திரிதல் 12. குட்டிச்சுவர்-பயனின்றி இருத்தல். 13. கொட்டியளத்தல்-மிகுதியாகப் பேசுதல் 14. அகழ்வாரை தாங்கும் நிலம் போல-பொறுமை 15. நன்பால் கலந்தீமையால் திரிதல் போல-கெடுதல் 16. மரப்பாவை நாணால் உயிர்மருட்டல் போல மயங்குதல்.          17. அடுத்தது காட்டும் பளிங்கு போல-வெளிப்படுத்துதல் What 1...